‘அரசியல்’ என்கிற ஒரு வார்த்தை மட்டும் புதியதொரு பொருள்தருவதாக இருந்ததவனுக்கு. எதையோ கண்டறிந்தவன் போல் வெவ்வேறு ஊர்களிலுள்ள இணையமையத்திற்கு சென்று புதிய மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி சிலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டு வீடுவந்துசேர்ந்தான்.
“நீ சொல்றது சாத்தியமாய்யா?”
“ஆமா சார். சட்டப்படி இது சாத்தியந்தான் சார். இந்திய-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்துல அரசியல் அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு சார். அதனால் நாம ஐரோப்பிய நாடுகள்ல எந்த நாட்டுல வேணும்னாலும் அரசியல்ல குதிக்கலாம்; தேர்தல்ல போட்டியிடலாம். ஜெயிக்கலாம்… என்ன வேணும்னாலும் பண்ணலாம் சார். நமக்கு வந்த மெயில் அப்படித்தான் சொல்லுது சார்”
“சமீபத்துல நமக்கு வந்த சில இலட்சம் கோடிய வெச்சி என்ன பண்றதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்… நல்லதா போச்சி.. ஆனா நம்ம குடும்பத்து பசங்களே நமக்கு போட்டியா வந்துருவானுங்க.. அதனால நாம மொதல்ல போயி நல்லதா ஒரு நாட்ட புடிச்சிரனும்.”
இது மற்றொரு கட்சியின் தேசியக்குழுக்கூட்டம்!
“நமக்கு வந்த மெயில்படி பாத்தா, நாம ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கலாம்”
“ஆமாம்! துருக்கிய ஐரோப்பிய யூனியன்ல சேக்குறதா வேணாமான்னு ஏற்கனவே அங்க ஒரு பிரெச்சனை இருக்கு.. இதை நாம பயன்படுத்திக்கணும்”
“நரேந்திர ஜான் அப்படின்னு என்னோட பேரையே மாத்திக்கிட்டு அங்க போயி, முஸ்லிம்-கிறிஸ்துவ பிரச்சனைய பெருசாக்கி ஏதாவது ஒரு நாட்டோட ஆட்சிய புடிச்சிர்றேன்.”
ஒரு மாநில கட்சி…
“ஒரே மொழி பேசுற ஸ்டேட்டயே ரெண்டாக்குற தெறம நம்மகிட்ட இருக்கு.. பெல்ஜியம்ல ரெண்டு மொழி பேசுறாங்கப்பா. அதனால அத ரெண்டாப்பிரிக்கனும்னு போராடி அதுல ஒரு நாட்டுல நாமதான் ஆட்சிக்கு வரோம்”
2000 அகில இந்திய செயலாளர்கள் பங்குபெறும் மாநாட்டில்…
“இந்த நாட்டுக்கே நான் ஒரு விடிதங்கமா இருந்தாலும், நமக்கு வந்திருக்குற மெயில்படி நாம ஐரோப்பாவில் ஒரு காமன் வெல்த் கேம்ஸ் நடத்துறோம்”
“ஆனா ஐரோப்பிய யூனியன் நாடுகள் காமன் வெல்த் நாடுகள் பட்டியல்லையே இல்லையே”
“ஓ! அப்படி ஒன்னு இருக்கோ! சரி காமன் வேர்ல்ட் கேம்ஸ் அப்படின்னு பெயர மாத்திருவோம்”
“சூப்பர்ங்க! இந்தியாவின் விடிதங்கம்னா அது நீங்கதாங்க”
“அம்மா… எல்லாரும் ஐரோப்பா போறாங்க… நாம ஐரோப்பால சுவிசர்லாந்த புடிச்சிருவோம்.”
“எதுக்கு சுவிசர்லாந்து?”
“கொடநாடவிட சுவிசர்லாந்து நல்லா இருக்கும்மா”
“ஓ! அப்பா நாமளும் கெளம்பிருவோம்”
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதைக்கண்டு வெலவெலத்துப்போன ஐரோப்பிய யூனியன், பேசாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாமாவெனவும் யோசித்துக்கொண்டிருக்கிறது.
ஒருபுறம் ஐரோப்பிய யூனியன் அந்த மின்னஞ்சல் அனுப்பியவனை தேடிக்கொண்டிருக்க, மறுபுறம் நமது கதாநாயகன் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க, ஒட்டுமொத்த ஐரோப்பாவே இந்தியமயமாகிக்கொண்டிருக்கிறது….
படத்தின் இறுதிக்காட்சியை வெள்ளைத்தாளொன்றில் பலவிதங்களில் எழுதிப்பார்த்தேன்.
‘இனி நியாயமான ஒப்பந்தங்களையே போடுவோம்’ எனச்சொல்லி அரசியல் கட்சிகள் திருந்துவதாக வைக்கலாமா? (அல்லது)ஐரோப்பிய நாடுகள் கதாநாயகனை சமாளிக்க முடியாமல் மன்னிப்பு கேட்டு திருந்துவதாக வைக்கலாமா, (அல்லது)
‘உலகம் இப்படித்தான்’ என கதாநாயகன் உணர்ந்து திருந்துவதாக வைக்கலாமா? (அல்லது)
இறுதி சண்டையில் கதாநாயகன் இறப்பது போன்றதொரு சோகமான முடிவை வைக்கலாமா?
இதுவா அதுவா…. அதுவா இதுவா…. என யோசித்துக்கொண்டிருக்கையில்,
“கொளத்தூர் அம்பேத்கர் நகர் எல்லாம் எறங்குங்க”, பேருந்து நடத்துனரின் குரல் கேட்டு இறங்கினேன்.
வீடிருக்கும் தெருவுக்குள் நுழைகையில் கூட்டமும் கூச்சலும் நிரம்பிக்கிடக்க, கூடுதலாக குரலெழுப்பி என்னைநோக்கிஅழுகொண்டே ஓடிவந்தாள் என் இளைய தங்கை.
“அண்ணே! இங்க வால்மார்ட்டுன்னு ஏதோ வெளிநாட்டுக்கடை வரப்போகுதாம்ணே. மெயின் ரோட்டுக்கு பக்கத்துல இருக்குறதால நம்ம தெருவையே அரசாங்கம் எடுத்துக்குதாம்…”
முத்திரை குத்தப்பட்ட அரசு நோட்டீஸ்களை வீடுகளின் நெற்றியில் ஒட்டி எங்களது தலையெழுத்தை அழித்தெழுதிக்கொண்டிருந்தார்கள் வந்திருக்கும் அதிகாரிகள்.
முப்பது வருட உழைப்பான தன் மளிகைக்கடையின் வாசலில் அமர்ந்து கண்ணீரால் கழுவிக்கொண்டிருந்தார் என் அப்பா.
“இந்த மாதிரி அநியாயம் பண்றீங்களே?”, அதிகாரியிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.
“வால்மார்ட்டுங்குறது ஒரு பெரிய கடை. அது வந்துச்சின்னா நம்ம எல்லாருக்கும் நல்லது. எல்லா பொருளும் சீப்பா கெடைக்கும்”, யாரோ எழுதிக்கொடுத்ததை ஒப்பித்துக்காண்பித்தார் அதிகாரி.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம், “அண்ணே! ஏதாவது செய்யணும்னே” என்றாள் என் தங்கை. நானே நிற்கிறேன் என் கதாநாயகன் நிலையில். வலது கையில் வைத்திருக்கும் இறுதிக்காட்சித்தாளை பார்த்தேன். வாழ்க்கைக்குதவாத வெற்று முடிவுகள் அவை. இடதுகையை வேகமாக உயர்த்தி கூட்டத்தை நோக்கி கத்தினேன்,“ஏதாவது செய்யணும்”. சில நொடிகளின் அமைதிக்குப்பின் எல்லோரும் அவர்களது இடதுகைகளை உயர்த்தி, “ஏதாவது செய்வோம்” என ஒருகுரலாய் ஒலியெழுப்பினர்.
மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது….
An excellent way of communicating critical facts in to a short story. With little bit alteration this short story form can be used to spread the news about EU India Free Trade Agreement. For more information about this agreement and information materials please visit http://www.forumagainstftas.net / http://www.bilaterals.org . “Let Us Do Something” Thanks, Manicandan manicandan@gmail.com
Good story… I love it… But every story is raising question before everyone… Eventhough it is very complex and difficult, it would be better if stories follow the track to answer question… “Let us do something” …. what that 'something'?.. Also try to frame the story in that way… Hope you can…
அவர்கள் ஆக்ரமித்துக்கொண்டிருகிறார்கள் நாம் பேசிக்கொன்டே (கணவு கண்டு கொண்டு ) இருக்கிறோம்இதுதான் இந்த கதையின் நீதி