இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை மிகப்பெரிய கவலையைத் தருகிறது. நமக்கு அருகாமையிலேயே ஒரு தேசம் இப்படியான நிலைமைக்கு வந்துசேர்ந்திருப்பது வருத்தமும் கோபமும் கலந்த ஒரு மனநிலைக்குக் கொண்டு சேர்க்கிறது. எந்த நாட்டில், எந்த காலகட்டத்தில், எந்த காரணத்திற்காக, யாருடன் யார் போர் புரிந்தாலும், அது உழைக்கும் வர்க்கத்திற்கான இழப்பு தான். போரினால் ஏற்படும் துயரங்களையும் துன்பங்களையும் இழப்புகளையும் தலையில் தூக்கி சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு உழைக்கும் மக்கள் தான் தள்ளப்படுவார்கள். உலகின் ஒரு பகுதியில் போர்… Continue reading இலங்கை நெருக்கடி – போர் எப்போதும் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி
Tag: உலக வங்கி
உக்ரைனில் என்ன நடக்குது? – 8
1999 இல் தன்னுடைய பதவிக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடாத வகையில் அரசியலுக்குத் தொடர்பில்லாத விக்டர் யுஷ்சென்கோவை பிரதமராக்கினார் லியோனிட் குச்மாவே. ஆனால், சோசலிசப் பின்புலத்தைக் கொண்டிருந்த உக்ரைனில் ப்ல புதிய பொருளாதாரக் கொள்களைகளை அறிமுகப்படுத்தி, லிபரல் தேசமாக மாற்ற முனைந்துகொண்டிருந்தார் பிரதமராகப் பதவியேற்ற யுஷ்சென்கோ. தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டுடைமாக்கப்பட்டிருந்த துறைகளை கொஞ்சம் கொஞ்சமாக பெருமுதலாளிகளிடம் தாரை வார்ப்பதை மறைமுகமாக செய்துகொண்டிருந்தார். அப்போது பாராளுமன்றத்தில் பெரிய கட்சியாக இருந்த உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சி யுஷ்சென்கோவிற்கு எதிராகக் குரல்… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 8