இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை மிகப்பெரிய கவலையைத் தருகிறது. நமக்கு அருகாமையிலேயே ஒரு தேசம் இப்படியான நிலைமைக்கு வந்துசேர்ந்திருப்பது வருத்தமும் கோபமும் கலந்த ஒரு மனநிலைக்குக் கொண்டு சேர்க்கிறது. எந்த நாட்டில், எந்த காலகட்டத்தில், எந்த காரணத்திற்காக, யாருடன் யார் போர் புரிந்தாலும், அது உழைக்கும் வர்க்கத்திற்கான இழப்பு தான். போரினால் ஏற்படும் துயரங்களையும் துன்பங்களையும் இழப்புகளையும் தலையில் தூக்கி சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு உழைக்கும் மக்கள் தான் தள்ளப்படுவார்கள். உலகின் ஒரு பகுதியில் போர்… Continue reading இலங்கை நெருக்கடி – போர் எப்போதும் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி
Tag: போர்
உக்ரைனில் என்ன நடக்குது? – 13
நவீன இனவெறி அமைப்புகளின் தோற்றமும் வளர்ச்சியும்: சோவியத் யூனியன் காலத்தில் பெரிதாக வாலாட்டமுடியாமல் தவித்த உக்ரைனிய அதிதீவிர வலதுசாரிகள், சோவியத் வீழ்ச்சியடைந்ததுமே, 1991இல் உக்ரைனிய சமூக தேசியக் கட்சியை உருவாக்கினர். சோவியத்தில் இருந்து விடுபட்ட பின்னர் கிடைத்த சுதந்திரத்தின் காரணமாக, வெளிப்படையாகவே இனவெறிக்கருத்துகளை அக்கட்சி பேசியது. ஹிட்லரைன் நாஜிப்படைகள் பயன்படுத்திய குறியீடுகளை அக்கட்சி பயன்படுத்தியது. 1999 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகவே ‘பேட்ரியாட் ஆஃப் உக்ரைன்’ என்கிற பெயரில் ஒரு ஆயுதந்தாங்கிய படையினை அக்கட்சி உருவாக்கியது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 13
உக்ரைனில் என்ன நடக்குது? – 12
உக்ரைனிய வலதுசாரிகளின் கொள்கைகள் எங்கிருந்து பெறப்பட்டன? இன்றைய உக்ரைனிய வலதுசாரி அமைப்புகளில் 10 மற்றும் 44 ஆகிய எண்கள் நிச்சமாக ஏதாவதொரு அடையாளங்களில் இடம்பெறுவதைப் பார்க்க முடியும். அது கொடியாக இருக்கலாம், அல்லது கட்சி அலுவலக எண்ணாக இருக்கலாம், அல்லது அடையாள அட்டையாக இருக்கலாம். 1929 ஆம் ஆண்டில் ஓயூஎன் அமைப்பு உருவாக்கப்பட்டபோது பத்து முக்கியமான கொள்கைகளாக வரையறுக்கப்பட்டதல்லாவா. அதனைக் குறிக்கும்விதமாக 10 என்கிற எண் பயன்படுத்தப்படுகிறது. அதே போல, ஒரு சுத்தமாக அக்மார்க் வெள்ளையின… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 12